நெருங்கும் தீபாவளி பண்டிகை - திருப்பூரில் காவல்துறை தீவிர கண்காணிப்பு

திருப்பூரில் தீபாவளியையொட்டி கடை தெருக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டை தடுக்கும் வகையில் உயர்கோபுரம் அமைத்து கண்காணிக்க காவல்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், திருப்பூரில் முக்கியமான கடை வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள், பட்டாசுகள், ஆடைகள் தான் இவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் கடை வீதிகளுக்கு செல்வது வழக்கம்.



இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் அதிகமான பொதுமக்கள் கடை வீதிகளுக்கு குவிவார்கள் என்பதால், மாநகர போலீசார் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.



அதன்படி முக்கிய சாலையான குமரன் சாலையில் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.



இதுபோல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி அருகே போன்ற பகுதிகளில் அதிகமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.



இதுபோல் உயர்கோபுரம் அமைத்தும் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...