ராசிபாளையத்தில் கலையரங்கம் திறப்பு விழா - எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி பங்கேற்பு

பொதுமக்கள் விழா நடத்த, கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்தலாம் என்றும், ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தெரிவித்தார்.


கோவை: சூலூர் அருகே ராசிபாளையத்தில் பொதுமக்கள் பயன்பாடுக்காக கலையரங்கத்தை சூலூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7,10,000/- மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.



இதன் திறப்புவிழாவிற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்.

சூலூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.குமரவேல், ராசிபாளையம் ஊராட்சி தலைவர் கவிதா ஆகியோர் வரவேற்றனர்.



சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி பேசும்போது, பொதுமக்கள் விழா நடத்த , கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, சூலூர் கார்த்தி, கூட்டுறவு சங்கதலைவர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...