கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நாளை துவக்கம்

ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு நாக்பூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு இம்மாநாடு கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.



மேலும், இந்த பிரதிநிதிகள் குழு சந்திப்பின் போது, பொதுச்சௌலாளர் உள்ளிட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த மூன்று ஆண்டுகளும் இக்கூட்டத்திலேயே இப்பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் நாளை துவங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 1500 மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் உள்ள 11 மண்டலங்கள் மற்றும் 42 மாகாணங்களில் தமிழ்நாடு வடக்கு மற்றும் தெற்கு தமிழ்நாடு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் இருந்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிகழ்வின் போது பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்றி வரும் இவ்வமைப்பினர் தங்களது அனபவங்கள் குறித்தும், அடுத்தகட்ட இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும். இதில் நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், அழிந்துவரும் மற்றும் பற்றாக்குறையான இந்திய பாரம்பரிய காளையினங்களை மேம்படுத்துதள் குறித்த கட்டுரை தொகுப்புகளும், விளங்கங்களும் இம்மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. 

இம்மாநாட்டினை தற்போதைய தலைவர் மோகன் மதுக்கர் பகவத் பங்கேற்று மாநாட்டினை துவக்கிவைப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. 

மேலும், இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேவையாற்றி வரும் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...