பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியான வன்முறையும், தலித் விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்

கோவையில் பாரூக் என்ற திராவிட கழகத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது எனவும், பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்களும் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

கோவையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக விமான நிலையத்தில் சந்தித்தாக தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றியது போல நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், பணபட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மக்கள் நல கூட்டணியானது கருத்து வேறுபாடுகளுடன் அதில் உள்ள கட்சிகள்  ஒன்றாக இருந்து வந்ததாகவும் தேர்தலில் போட்டியிடாத  சி.பி.ஐ , விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் பாரூக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என கூறியவர் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் குற்றச்சாட்டினார். 5 மாநில தேர்தல் காங்கிரஸ் தோல்வி என்றோ, பா.ஜ.கவிற்கு வெற்றி என்றோ எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோவாவி அதிக இடங்களை காங்கரஸ் வெற்றி பெற்றிருந்தும்  குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சியை பா.ஜ.க அமைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு  தமிழக அரசு நிதி ஓதுக்கி இருப்பது வரவேற்க தக்கது எனவும் தெரிவித்த அவர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க காரணமானவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...