அண்ணாமலைக்கு பேனர் வைக்க மறுப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு

சூலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது அண்ணாமலைக்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அண்ணாமலை வருகைக்காக கருமத்தம்பட்டி பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களை பொது இடங்களில் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இதன் காரணமாக நான்கு ரோட்டில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



மேலும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி உத்தரவின் பேரில் ஆய்வாளர் அன்னம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் மூவரையும் நேரில் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள கண்டித்து பாஜகவினர் சமூக வலைதளங்கள் கண்டன பதிவை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...