கோவை மாநகராட்சியில் செயல்படும் அரசு மாணவர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிகள், ஆதிதிராவிடர் மாணவர்களின் நல விடுதிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் உண்டு பரிசோதித்தார்.



மேலும் அங்கு தங்கியுள்ள மாணவர்களிடமும் அங்குள்ள வசதிகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை உடன் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உடன் இருந்தார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...