ஆயுத பூஜை கொண்டாட்டம் - கோவையில் பழங்கள் விலை இருமடங்கு அதிகரிப்பு

ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி இன்று கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று மந்தமாக இருந்தாலும் பழங்கள் விலை கடந்தாண்டை ஒப்பிடுவையில் இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளது.


கோவை: கோவை பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வண்ண வண்ண பூக்கள் குவிந்துள்ளன.

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து பூஜித்து வழிபடுவர். பண்டிகை தினம் நெருங்கியுள்ள சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

சேலம், நாமக்கல், தர்மபுரி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தாண்டு செவ்வந்திப் பூ நல்ல விளைச்சல் உள்ளதால் செவ்வந்தி சராசரியாக ரூ.200 என்ற விலைக்கு விற்பனையாகின்றன. தற்போதைய சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூ தற்போது ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.



கோழிக்கொண்டை ரூ.60 முதல் ரூ.100க்கும், செண்டு மல்லி ரூ.60 முதல் ரூ.70க்கும், சம்பங்கி ரூ.200க்கும் விற்பனையாகிறது. அரளி ரூ.300 முதல் ரூ.400க்கும், மல்லி ரூ.800- 1000 வரையும் விற்பனையாகின்றன.



பழங்களை பொறுத்த வரையில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180 ஆரஞ்சு ரூ.70 முதல் ரூ.80, மாதுளை ரூ.200 முதல் ரூ.240, திராட்சை ரூ.120 முதல் ரூ.140, சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.80, கரும்பு ஜோடி ரூ.100க்கும், வாழை மரம் ஜோடி ரூ.40க்கும், வெள்ளை பூசனி கிலோ ரூ.30க்கும் வியாபாரம் செய்யப்படுகின்றன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...