கோவை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீதுவபோக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளாராக (SSI) பணியாற்றி வருபவர் துரைராஜ்(55). இவர் ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு 19 மற்றும் 17 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் பலமுறை அந்த பெண் வீட்டில் இல்லாத போது துரைராஜ் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்நிலையில் நான்கு தினங்களுக்கு முன் அச்சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் அப்பெண் சிறுமிகளை காணவில்லை என புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போலிசார் அச்சிறுமிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் துரைராஜ் செய்த பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துரைராஜ் மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்கு செய்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...