கோவை மாநாடு பற்றி தாராபுரத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணி கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் கழக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜர் தலைமையில், ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் அழகுராஜ், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடம் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ஆலோசனை வழங்கினார்.



இந்த கூட்டத்திற்கு தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் ஜவகர் செய்திருந்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...