ஆயுத பூஜையை முன்னிட்டு உடுமலையில் பொரி உற்பத்தி தீவிரம் - தமிழக அரசு மானியம் வழங்க கோரிக்கை

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால் உடுமலை பகுதிகளில் பொரி உற்பத்தி கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


திருப்பூர்: நலிவு அடைந்து வரும் பொரி தொழிலை மேம்படுத்தவும்,இதனை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அடையயவும், தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஏரிப்பாளையம், கொமரலிங்கம், கொழுமம், பாப்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் பொரி உற்பத்தி கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பொரி தயாரிக்க பயன்படும் அரிசி, கல்கத்தா மற்றும் கர்நாடகவில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ அரசி கிலோ 25 ரூபாய் க்கு விற்று வந்த நிலையில் தற்போது கொள்முதல் விலை, மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.35 ரூபாய் விற்பனை ஆகி வருகிறது. இதற்கிடையில் இந்த அரிசியை நீரில் ஊற வைத்து, சூரிய ஒளியில், உலர வைத்து, சிறு குவியல்களாக குவித்து வைக்கப்படுகிறது. பின்பு அதில் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் ஆகியவை தேவைக்கு தகுந்த அளவில் சேர்த்து, சில மணி நேர பக்குவம் செய்யப்படுகிறது. பின்பு, இந்த அரிசியை பொரி உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் (பொரிஅடுப்பு) கொட்டி, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வேக வைக்கும் பொழுது, சுவைமிகுந்த பொரி உற்பத்தியாகிறது. இதை மூட்டைகளில் சேகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:பொரியை படி மற்றும் பக்கா அளவில் கொடுக்கிறோம். 110லிட்டர் கொண்ட ஒரு மூட்டை தற்போது மூலப்பொருள் விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாய் 500 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. இருப்பினும் பொரி உற்பத்திக்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கூலியும் உயர்ந்து இருப்பதால் பொரி உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறைந்த அளவு கிடைக்கிறது. மேலும் உடுமலை நகராட்சி ஏரிப்பாளையம் பகுதியில் மட்டும் சுமார் 60 க்கும் குடும்பங்களுக்கு மேல் பொரி உற்பத்தி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் இத் தொழில் நலிவடைந்து தற்போது திருப்பூர், கோவை பனியன் கம்பெனி உட்பட பல்வேறு மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

ஆகையால் நலிவு அடைந்து வரும் இத்தொழிலை மேம்படுத்தவும் பொரி உற்பத்தி நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அடைய தமிழக அரசு இந்த இயந்திரங்கள் வாங்க கடன் உதவியும் மற்றும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் மற்றும் மேலும் குடிசைத் தொழிலாக செய்து வந்தாலும் வழக்கமான தொழில்களுக்கான மின் கட்டணமே செலுத்தும் நிலை உள்ளது எனவே பாரம்பரிய தொழிலை காப்பாற்றும் வகையில் மின் கட்டணத்தில் சலுகை மற்றும் ஆணியும் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...