ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு

ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


கோவை: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாதாரண மக்கள் நிறைந்து வாழும் ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் பலமுறை கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்தோம். தற்போது சமுதாய நலக்கூடம் அமைத்திட ஏற்பாடு நடைபெறுவதாக தெரிய வருகிறது.

எனவே ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுத்து பேசப்பட்டது.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் கமிட்டி உறுப்பினர் சி.மாசாணி, அஜித் மற்றும் கருப்புசாமி, ரவிச்சந்திரன், சுரேஷ்குமார் மற்றும் மாதர் சங்கம் சார்பாக ஜல்லிப்பட்டி கிளை கிளைத்தலைவர் தெய்வானை, கமிட்டி உறுப்பினர் கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...