சிறுமிக்குப் பாலியல் தொல்லை - கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பூர்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி.

திருப்பூா் மாவட்டம், குண்டடம், பொட்டிக்காம்பாளையத்தைச் சோந்தவா் சுப்பிரமணி. கட்டட மேஸ்திரியான இவரிடம் சித்தாள் வேலைக்கு 35 வயது பெண் ஒருவா் வேலை செய்து வந்தாா். இவா் உடல்நலக்குறைவாக இருந்ததால், அவரது 15 வயது மகளை சுப்பிரமணி சித்தாள் வேலைக்கு கடந்த 2019 செப்டம்பா் 1 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் வேலைக்கு அழைத்துச்செல்லாமல் சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி வெளியூா் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் மகளிா் காவல் துறையினா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2000 ஆயிரம் அபராமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...