சிறுமிக்குப் பாலியல் தொல்லை - கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பூர்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி.

திருப்பூா் மாவட்டம், குண்டடம், பொட்டிக்காம்பாளையத்தைச் சோந்தவா் சுப்பிரமணி. கட்டட மேஸ்திரியான இவரிடம் சித்தாள் வேலைக்கு 35 வயது பெண் ஒருவா் வேலை செய்து வந்தாா். இவா் உடல்நலக்குறைவாக இருந்ததால், அவரது 15 வயது மகளை சுப்பிரமணி சித்தாள் வேலைக்கு கடந்த 2019 செப்டம்பா் 1 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் வேலைக்கு அழைத்துச்செல்லாமல் சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி வெளியூா் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் மகளிா் காவல் துறையினா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2000 ஆயிரம் அபராமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...