மடத்துக்குளம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் - சீறி பாயந்த காளைகள்

மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.



மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைந்து மாட்டு வண்டி பந்தயம் எனப்படும் ரேக்ளா பந்தயத்தினை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



பொள்ளாச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் திருப்பூர் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.



குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் சென்றடையும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்களும் கோப்பைகளும் பரிசாக வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஏ.சாகுல் அமீது, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நா.பாலசெந்தில், கு.சாமிதுரை மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் த.கௌதம்ராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...