வால்பாறை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலை - சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு

ஊசிமலை எஸ்டேட் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று காலை இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுஆய்வு மேற்கொண்டார்.


கோவை: ஊசிமலை எஸ்டேட் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீர் அமைக்க விரைவாக சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் சாலை அமைத்து பத்து வருடத்துக்கு மேலாக உள்ளது.



சாலை தற்போது குண்டும் குழியுமாக படிக்கட்டு போல் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிகம் சிரமப்படுகின்றனர்.

ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவு சோலைப்பாடி மட்டம் என்ற இடம் வரை சுமார் 5 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, மருத்துவமனை போன்ற அத்தியாவிசியமான தேவைகளுக்கு அரசு பேருந்தையும் தனியார் வாகனங்களில் பயன்படுத்துகின்றனர்.



தற்போது சாலை குண்டு குழியுமாக பல ஆண்டுகளாக உள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் இரவு நேரங்களில் அவசர மருத்துவ தேவைக்கு 108 வாகனம் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று காலை ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலையை ஆய்வு செய்ய மேற்கொண்டார் இதில் சுமார் பத்து கிலோமீட்டர் வரை சாலை குண்டு குளியுமாக உள்ளது.



அதை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஊசிமலை எஸ்டேட் மக்களிடம் பேசுகையில் சாலையை அரசுக்கு ஒப்படைக்கவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினரை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்.



ஆனால் இதுவரை சாலை கூட போட்டு தர முடியவில்லை என்று பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். இந்த சாலை சீர் அமைக்க விரைவாக சட்டமன்றத்தில் பேசி தமிழக அரசு சாலையை அமைத்து தர கோரிக்கை விடுவதாகவும் மக்களிடம் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...