கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் மனு

ஓய்வூதியம் உயர்வு, மருத்துவ படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவிகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஓய்வூதியம் உயர்வு மருத்துவ படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவிகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், இமாச்சலப் பிரதேசம் ராஜஸ்தான் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய காப்பீட்டு களைந்து மருத்துவமனை செலவீனத்தை அரசு ஏற்க வேண்டும், மருத்துவ படியை ஆயிரம் ரூபாய் உயிருக்கு வழங்க வேண்டும், வரும் ஆண்டுகளில் டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினமாக அரசு ஏற்று அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்தக் கோரிக்கை மனு கோவை மாவட்ட தலைவர் டேவிட் மோகன் குமார் தலைமையில் வழங்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...