பல்லடத்தில் அதிகாலையில் காற்றாலை மீது விழுந்த இடி - இயங்காமல் இருந்ததால் விபத்து தவிர்ப்பு

பல்லடம் அருகே கேத்தனூரில் ஆறு வருடங்களாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது இன்று அதிகாலையில் இடி இறங்கி முழுமையாக பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: இடி விழுந்து பற்றி எரிந்த காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேத்தனூரில் இருந்து மானாசிபாளையம் செல்லும் சாலையில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.



அதில் ஆறு வருடங்களாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது திடீரென இன்று அதிகாலை இடி இறங்கியதால் காற்றாலை முழுமையாக தீ பற்றி எரிய தொடங்கியது.

இந்த காற்றாலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதாகவும் கடந்த ஆறு வருடங்களாக காற்றாலை இயங்கவில்லை எனவும் காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் வீடுகள், கால்நடைகள் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹை டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த காற்றாலை இயங்காமல் இருந்த நிலையில் அந்த காற்றாலையை அப்புறப்படுத்தாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் எனவும் இதுபோன்று ஏராளமான காற்றாலைகள் இப்பகுதியில் இயங்காமல் உள்ளதாகவும் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...