வால்பாறையில் கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் -200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.


கோவை: கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இஜிசி மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இப்பணியில் 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றினார்.

வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் ராஜாராம், வால்பாறை மருத்துவர் சாமிநாதன், முடிஸ் நகர் மருத்துவர் உதயா, சோலையார் நகர் மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் பணியாற்றினார்.



இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இஜிசி, பொது மருத்துவ ஆலோசனை போன்றவைகள் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.



இதில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் துணைத் தலைவர் தாமா செந்தில்குமார் மற்றும் திமுக நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் இப்பணியை துவங்கி வைத்தனர். காலை 10 மணியிலிருந்து முகாம் நடைபெற்றது.



இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...