தாராபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளையுடன் நிறைவு

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி, ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது.


திருப்பூர்: கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன.

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி., ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

விழாவில் மாவட்ட ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், அறக்கட்டளை தலைவர் லோகநாதன், ரோட்டரி சங்க தலைவர் சுப்ரமணியம், நிர்வாகத்தினர் குமாரசாமி, குப்பிராஜ், அழகுராஜா, சிவப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை ரோட்டரி செயலாளர் கதிரவன், திட்ட இயக்குனர் மைக்கேல், ஓமேகா ஈவென்ட்ஸ் வெங்கடேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...