இ-பைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறை கீழமை நீதிமன்றங்களில் நடைமுறை படுத்துவதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொதுமக்களுக்கும் தங்களுக்கும் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் இ-பைலிங் முறையை கைவிட்டு பழைய நடைமுறையை கொண்டு வர வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது, இ பைலிங் நடை முறைக்கு குறித்து நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில், இ-பைலிங் முறை அமல் படுத்தபட்டு இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அடிக்கடி சர்வர் பிரச்சனை ஏற்படுவதால் இ பைலிங் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும், வழக்கமான நடைமுறையுடன். இ-பைலிங் முறையும் அமல்படுத்த வேண்டும் என்றும், இ-பைலிங் முறையில் இருக்கும் சிக்கல்கள் சரி செய்த பின் அதை முழுமையாக அமல்படுத்தலாம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே நீதிமன்றங்களில் போதிய ஆட்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் நிலையில் இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் இது இருப்பதால் இ-பைலிங் முறையுடன், பழைய நடைமுறையினையும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...