உடுமலையில் மாற்றுத்திறனாளி பணி நீக்கம் - பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

உடுமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவராஜ் என்பவர், சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிய தன்னை பணி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


கோவை: தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சிவராஜ். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதல், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் தன்னை சமீபத்தில் பணி நீக்கம் செய்துள்ளனர்.

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய தன்னை பணிநீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், ஏற்கனவே தனது பணி தொடர்பாக வழக்கு தொடர்ந்து அதற்கான நீதிமன்ற தடையாணை இருக்கும் நிலையில், தற்சமயம் தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...