அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் - கோவையில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய பாமகவினர்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக பாமகவினர் வழங்கினர்.


கோவை: அன்புமணி ராமதாசின் பிறந்தாளை பாட்டாளி மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.

நாடாளுமன்ற உருப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார். அவரது பிறந்தநாளை பாட்டாளி பிறந்தநாளினை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.



பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையிலான பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செல்வபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் உட்பட கோவை மாநகரில் மூன்று முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டாடினர்.



மேலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உள்ள பல தரப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு மாரடைப்பு வந்தால் உடனடியாக உட்கொள்ள வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள்( Loading dose) வழங்கினர்.

இது குறித்து கோவை பாமக கிழக்கு மாவட்ட் செயலாளர் கோவை ராஜ் கூறுகையில் உயிர் காக்கும் மருந்துகள் தனிப்பட்ட முறையில் வாங்க வேண்டும் என்றால் சுமார் 75 ரூபாய் வருகிறது இந்த மருந்துகளை டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையிலே முக்கிய இடங்களிலே இலவசமாக மருந்துகள் வழங்கி வருகின்றோம் இன்று மட்டும் 300 பேருக்கு மருந்து இலவசமாக வழங்கப்படுகின்றது அடுத்த கட்டமாக ஒவ்வொரு பகுதிகளாக சென்று எல்லோருக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கிட உள்ளோம் என்று தெரிவித்தனர். இதில் கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ், மகளிர் அணி செயலாளர் கெளசல்யா, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மடத்தூர் ரமேஷ் மற்றும் கோபி உள்ளிட்ட பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...