நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் - தேசிய நதி பாதுகாப்பு அதிகாரி ஆலோசனை

நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகத்தின் திட்ட இயக்குநர் அசோக்குமார் தலைமையில் கோவையில் நடைபெற்றது.


கோவை: நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து தேசிய நிதி பாதுகாப்பு இயக்குநர் கோவையில் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகத்தின் திட்ட இயக்குநர் ஜி.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, நீர்வளத்துறை தலைபொறியாளர் (திருச்சிமண்டலம்) சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் (கோவை மண்டலம்) சிவலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன். கோவிந்தன் உட்பட நீர்வளத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு செல்கிறது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 62.21 கிமீ. தூரத்திற்கு செல்லும் நொய்யல் ஆற்றின் குறுக்கே 17 அணைக்கட்டுகளும், 25 குளங்களும் அமைந்துள்ளன.

இதில் கழிவுநீர் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து அவற்றை தடுப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள, தேசிய நதி பாதுகாப்பு இயக்குநாக திட்ட இயக்குனர் அசோக்குமார் நேற்றும் இன்றும் நொய்யல் ஆற்று ஆரம்ப பகுதி முதல் இருகூர் அணைக்கட்டு வரை ஆய்வு மேற்கொண்டார்.



அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கோயம்புத்தூர் மண்டலம் மற்றும் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிறுதுளி அமைப்பினர் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்தாய்வில் நொய்யல் ஆற்றினை மாசற்றதாக மாற்ற "நடந்தாய் வாழி காவேரி" திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...