குண்டடத்தில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி - எதுவும் சிக்காததால் திருடர்கள் ஏமாற்றம்

குண்டடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடச் சென்ற மர்ம நபர்கள் வீடுகளில் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட முயன்ற மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டடத்தை அடுத்துள்ள சூரியநல்லூர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 75), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. உள்ளே பணம், நகை ஏதும் வைக்கப்படாததால் ஏமாற்றத்துடன் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

இதே போல் சின்னாரிபாளையம் வேலுசாமி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கும் ஏதும் கிடைக்காத நிலையில் உப்பாறு அணை சுண்டமந்தை அருகில் உள்ள நடராஜ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவின் பூட்டையும் உடைத்து அதிலிருந்த துணிமணிகளை எடுத்து வீட்டின் உள் பகுதியில் வீசியிருந்தனர். அங்கும் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.

இது பற்றிய தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...