வேளாண் தொழில் முனைவோருக்கு மானியம் - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்‌ முனைவோருக்கான மத்திய அரசின்‌ மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ சார்பில் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ வணிக இயக்குனரகம்‌, தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ 2019-ல்‌ இருந்து செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இரண்டு பிரிவுகள்‌ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகின்றது.

புதிய வேளாண் தொழில்‌ முனைவோர்களுக்கான ரூ.5 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, வேளாண்‌ துளிர்‌ நிறுவனங்களுக்கான ரூ 6 லட்சம் முதல் ரூ.25 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ 2019 முதல்‌ 2022 வரை ரூ. 8.10 கோடி மானியம்‌ தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ 70 தொழில்‌ முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வேளாண் மறறும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ தேர்ந்தெடுக்கபட்ட புத்தொழில்‌ முனைவோர்கள்‌ மற்றும்‌ உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு 6 வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்‌ முனைவர்‌ கீதா லட்சுமி மானியங்களை வழங்கினார்‌. அப்போது அவர் பேசும் போது, "இளம்‌ பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில்‌ ஈடுபடுத்துவது பெரிய சவாலாக உள்ளது. இது போன்ற மானியங்கள்‌, இளைஞர்களை வேளாண்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌, ஆராய்ச்சிகளை மேற்கொள்வதறகும்‌ மற்றும்‌ வேளாண்‌ தொழில்‌ மேம்படுத்துவதறகும்‌ ஊக்கம்‌ அளிக்க வேண்டும்‌" என வலியுறுத்தினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவா்‌ ஏ.சோமசுந்தரம்‌ வரவேற்புரையாறறினார்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி ஞானசம்பந்தம்‌ நன்றியுரை வழங்கினார்‌.



மேலும்‌ இவ்விழாவில்‌ பல்கலைக்கழக அதிகாரிகள்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நோ்முக உதவியாளர்‌ அகமத்‌, வேளாண் துணை இயக்குனர்‌ (வேளாண் வணிகம், விற்பனை) பெருமாள்சாமி மற்றும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ மானியம்‌ பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ தங்கள்‌ மானியத்தை தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...