காந்தியடிகள் பிறந்தநாள் - கோவையில் கைத்தறி மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் அங்காடியில் முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்இ வைத்தார்.


கோவை: காந்தியடிகளின் சிலைக்கு கைத்தறி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் கிராந்திகுமார், அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் புகைப்படங்களுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்றைய தினம் அரசு சார்பிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அங்கு இருந்த காந்தியடிகளின் சிலைக்கு கைத்தறி மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் கிரி அய்யப்பன், கைத்தறித்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...