உலக சுற்றுலா தினம் - கோவையில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் மாணவர்கள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் மூலம் ஒரு லட்சம் விதைபந்துகளை தயாரிக்கும் நிகழ்ச்சியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.


கோவை: மாணவர்கள் உருவாக்கும் விதைகளில் இருந்து சுமார் 40,000 முதல் 50,000 மரங்கள் உருவாகவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பெருமிதம் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுலாத்துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுலாத்துறை, ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர், டிராவல் முகவர் சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு, ஒரு இலட்சம் விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

பின்னர் மாணவ, மாணவர்களிடம் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கனகராஜ், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுலாத்துறைத் தலைவர் பேராசிரியர் சங்கீதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீனிவாசன் உட்பட கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், 2023 ஆண்டின் உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் "சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு" என்பதாகும். தொழில்துறை, மருத்துவம், கல்வி சுற்றுலா, உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயற்கை எழில்மிகு இடங்கள், கோயில்கள், அருங்காட்சியம், அருவிகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

மேலும், பசுமையான பகுதிகள் அதிகமுள்ளன. இருந்தாலும் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பை 33 சதவீதமாக அடைவதற்கான இடைவெளியை குறைத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் இன்று மற்றும் நாளையும் ஒரு இலட்சம் விதைபந்துகளை உருவாக்கிறார்கள்.

இந்த விதைகளில் 40-50 சதவீதம் வரை மரங்களாக வளர வாய்ப்புகள் இருக்கின்றது. மாணக்கர்களாகிய நீங்கள் உருவாக்கும் விதைகளில் இருந்து சுமார் 40,000 முதல் 50,000 மரங்கள் உருவாகவுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...