கவுண்டச்சிபுதூரில் தீ விபத்து - இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறையினர்

கவுண்டச்சிப்புதூர் பகுதியில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தியபோது, அதில் இருந்து பரவிய தீயால் விவசாயி வைத்திருந்த வைக்கபோர் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: பெரும் விபத்து ஏற்படும் முன்பே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ராம்நகர் குடியிருப்பு பகுதியில் மத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இந்தியன் ஆயில் பெட்ரோல் டீசல் விற்பனைநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டிய பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. விவசாய நிலங்களும் உள்ளன.

அங்கு கால்நடைகளுக்கு உண்டான தீவனங்கள் வைக்க போல் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தூய்மைப்படுத்தி குப்பைகளை அப்புறப்படுத்தாமல் துப்புரவு பணியாளர்களே தீட்டு வந்தனர்.



அப்போது அங்கு அடித்த காற்றில் அந்த தீ பரவி அங்குள்ள விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கபோர் திடீரென தீப்பற்றி எரிந்து அதிகளவில் தீ பரவியதால் அங்குள்ள பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தாராபுரம் தீயணைப்பு துறை தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர்.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்குள்ள தீயினை சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து வந்தனர்.

அங்குள்ள பொதுமக்கள் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...