நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும் - தாராபுரத்தில் 43வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் கோனாரிபட்டி அருகேயுள்ள நல்லதங்கள் அணைக்கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீட்டு கேட்டு தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 43வது நாளில் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலத்திற்கு இழப்பீடு வழங்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என நல்லத்தங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோனாரிபட்டி அருகே நல்லதங்காள் நீர் பிடிப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுவதற்காக 97 விவசாயிகள் 850 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். இதற்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.



43வது நாளான நேற்று மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...