காங்கேயத்தில் மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் - செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கொடியேற்றி துவக்கி வைத்தார்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் காங்கேயத்தில் திமுக பூத் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் நடைபெற்றது. 14 திமுக மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட 50 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 14,411 பூத் முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பூத் முகவர்களின் பங்களிப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர்.



பூத் முகவர்கள் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...