தாராபுரம் குண்டடத்தில் அண்ணாமலை யாத்திரை - மாற்றுத்திறனாளிக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்ட்டடத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணமலை மாற்றுதிறனாளிகள் 30 பேருக்கு இலவச சக்கர சைக்கிள் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள புதிய நவக்கொம்பு பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரைக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.

அரவிந்த் தோட்டத்திற்கு வந்த அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு 30 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை இலவசமாக வழங்கினார்.



மேலும் பொதுமக்களுக்கு நல திட்டங்களை வழங்கி சிறப்புரைத்தார்.

நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்குகினார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ருத்ரகுமார், அமெரிக்கவாழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாட்டு துரை, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் உலகநாதன், ருத்ராவதி பேரூராட்சி கிழக்கு ஒன்றிய பாஜக மகளிர் அணி தலைவர் கண்ணம்மாள், நான்காவது வார்டு கவுன்சிலர் பாலதண்டபாணி, 5 வது வார்டு கவுன்சிலர் கௌரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...