கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்றவர்களை வெட்டிய சம்பவம் - 5 பேர் கைது

வழக்கு ஒன்றில் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்றவர் மற்றும் அவரது நண்பர்களை ராம்நகர் பகுதியில் ஓட ஓட துரத்தி வெட்டிய சம்பவத்தில் 5 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(24), அருண் பிரகாஷ்(22), பிரகாஷ்(26), ஆதித்யன்(23), கார்த்தி(22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமினில் வெளியில் வந்த நிலையில் கடந்த 12ம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு அவரது நண்பர்களான ரஞ்சித் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.

அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற 9 பேர் கொண்ட கும்பல், ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகில் நிதீஷ் குமாரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இந்தசம்பவத்தில் நிதிஷ்குமாரின் நண்பர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தற்பொழுது சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(24), அருண் பிரகாஷ்(22), பிரகாஷ்(26), ஆதித்யன்(23), கார்த்தி(22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...