தேசிய ஊட்டச்சத்து மாத விழா - கோவையில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, கோவை ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.



கோவை: 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு மாதத்தின் துவக்கத்திலிருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கன்வாடி ஊழியர்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டம் 4 சிங்காநல்லூர் வட்டாரம் மற்றும் சர்க்கார் சாமகுளம் வட்டாரம் சார்பில் ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர்.



கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய இந்த மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...