கோவை சிறையில் சிறை காவலர்களுக்கும் கைதிளுக்கும் மோதல் - 4 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: சிறைக்காவலர்களுக்கும்-கைதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மோதலில் ஈடுபட்ட 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சுமார் 600 கைதிகள் உள்ளனர். அவர்களை கண்காணிக்க வார்டர்கள், சிறை காவலர்கள் உள்ளனர். இந்நிலையில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் தினேஷ்(எ) மண்டை தினேஷ், அய்யனார், அழகர்சாமி, ஹரிஹரன், கிஷோர்குமார், உதயகுமார், அரவிந்த் என்ற 7 கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே ஏதோ காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது.



இதில் ராகுல், மோகன்ராஜ், பாபுஜான், விமல்ராஜ் ஆகிய 4 சிறை காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அந்த 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இதர சிறை காவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகள் 20-25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...