திருப்பூர் அருகே பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து பாலியல் வன்புணர்வு - பரபரப்பு!

திருப்பூர் அவிநாசி மங்கலம் புறவழி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: அவிநாசி மங்கலம் புறவழிச் சாலையில் படுத்துறங்கிய பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் புறவழிச் சாலை அருகேயுள்ள கடை முன்பாக ஆதரவற்ற நிலையில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நேற்று இரவு கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் அருகே கல்லை தூக்கி கொண்டு வந்த நபர் ஒருவர் பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.



ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மழை நீர் வடிகாலுக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.



இந்நிலையில், காலையில் சடலத்தை மீட்ட அவிநாசி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான பெண் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம்.

இதனை அறிந்த நபர் ஒருவர் வன்புணர்வு செய்வதற்காக கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின் வன்புணர்வு செய்யப்பட்டாரா என்பது முழுமையாக தெரியவரும். மேலும், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...