சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்ட தலைமை ஆசிரியர் - பள்ளி முன்பு இந்து முன்னணியினர் குவிந்ததால் பரபரப்பு!

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.



திருப்பூர்: சாமுண்டிபுரம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் சனாதனத்தை வெரறுப்போம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை கண்டித்து பள்ளி முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதானத்தை வேரறுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வடக்கு காவல் நிலைய போலீசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்ற மாநகராட்சி திமுக மேயர், தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எதற்காக இங்கு கூட்டம் என்று கேள்வி எழுப்பி சிறிது நேரம் அங்கு நின்று விட்டு அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.



பள்ளியை முற்றுகையிடுவதற்காக வந்திருந்த 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...