சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்ட தலைமை ஆசிரியர் - பள்ளி முன்பு இந்து முன்னணியினர் குவிந்ததால் பரபரப்பு!

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.



திருப்பூர்: சாமுண்டிபுரம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் சனாதனத்தை வெரறுப்போம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை கண்டித்து பள்ளி முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதானத்தை வேரறுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வடக்கு காவல் நிலைய போலீசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்ற மாநகராட்சி திமுக மேயர், தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எதற்காக இங்கு கூட்டம் என்று கேள்வி எழுப்பி சிறிது நேரம் அங்கு நின்று விட்டு அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.



பள்ளியை முற்றுகையிடுவதற்காக வந்திருந்த 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...