தாராபுரத்தில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளி போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையிடம் ஆசை வார்த்தை கூறி திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட தையல் தொழிலாளியின் செயல் அப்பகுதி மக்களை எரிச்சலடைய வைக்கும் வகையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான தையல் தொழிலாளி. இவரது மனைவியின் தங்கை 17 வயது சிறுமி ஆவார்.

சிறுமி அவ்வப்போது தனது அக்காள் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். அப்போது தையல் தொழிலாளி தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக வீட்டில் கூறினார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது தனது அக்காள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் விசாரனை மேற்கொண்டு தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...