உடுமலை அருகே இலவச மருத்துவ ஆலோசனை முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

உடுமலை அடுத்த காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ஊராட்சி காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கராஜ் மெய்ஞானமூர்த்தி தலைமையில், ஒன்றிய பொதுக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்ரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I. நெல்சன் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.

இதில் டாக்டர். பரமசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தி.மு.க இளைஞர் அணியை சேர்ந்த சம்பத்குமார் செய்திருந்தார். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...