திருப்பூரில் மின்மாற்றியில் சிக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழப்பு..!! இரைத்தேடி வந்தபோது பரிதாபம்.!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர்: இறைத்தேடி வந்த தேசிய பறவையான மயில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த மயிலின் உடலை அடக்கம் செய்வதற்காக வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.

தேசிய பறவையான மயில் நாள்தோறும் இரைத் தேடி திருப்பூர் நகர் பகுதியில் வலம் வருவது வழக்கம்.



இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இறைத்தேடி வந்த மயில் ஒன்று மின்மாற்றியில் அமர்ந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.



இதனைப்பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த நிலையில் மயிலை மீட்டனர்.

உயிரிழந்த இந்த ஆண் மயிலுக்கு ஒன்றரை வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அடக்கம் செய்வதற்காக மயிலின் உடலை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர். மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...