தமிழ் மொழி விழிப்புணர்வு..!! உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுவன்.!

தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 9வயது சிறுவன் 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் விளக்கவுரையாற்றி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


கோவை: 63 நாயன்மார்களின் வரலாற்றை விளக்கிய ஒன்பது வயது சிறுவன் பவேசின் சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை நோபல் புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா மற்றும் காவல் ஆய்வாளர் மீனாகுமாரி ஆகியோர் வழங்கி சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 9வயது சிறுவன் 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் விளக்கவுரையாற்றி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பிரசன்னகுமார்-நளினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் பவேஷ். 5ஆம் வகுப்பு பயிலும் இந்த சிறுவன், சிறுவயதில் இருந்து தமிழ் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். சிறுவனின் ஆர்வத்தை கண்ட பெற்றோர் அவருக்கு தமிழ் மீதான பயிற்சிகளை வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் பவேஷ் தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் பொதுமக்கள் முன்பு தனி தனியாக விளக்கவுரையாற்றி பிரமிக்க வைத்தார்.

சிறுவனின் இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை நோபல் புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா மற்றும் காவல் ஆய்வாளர் மீனாகுமாரி ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...