வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா, வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கோவை: வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகம் வந்து செல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பாக வனத்துறையினர் ஆழியார் சோதனை மையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வால்பாறைக்கு செல்ல அனுமதிக்கபடும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பலகையால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுனர் சங்கம், தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வனத்துறையால் வைக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.



இது தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா முன்னிலையில் வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கத்தில் சங்கத்தினர் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வனத்துறையினர் தெரிவிக்கையில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது ஆறு மணிக்கு மேல் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வரும்பொழுது மனித வன விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தனர்.



இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை குறைக்க வேண்டும். வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...