வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா, வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கோவை: வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகம் வந்து செல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பாக வனத்துறையினர் ஆழியார் சோதனை மையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வால்பாறைக்கு செல்ல அனுமதிக்கபடும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பலகையால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுனர் சங்கம், தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வனத்துறையால் வைக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.



இது தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா முன்னிலையில் வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கத்தில் சங்கத்தினர் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வனத்துறையினர் தெரிவிக்கையில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது ஆறு மணிக்கு மேல் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வரும்பொழுது மனித வன விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தனர்.



இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை குறைக்க வேண்டும். வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...