தாராபுரத்தில் சாக்கடை கழிவால் துர்நாற்றம் - பொதுமக்கள் சாலை மறியல்!

தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் மற்றும் சூளைமேடு குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றதாகவும், இதனால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே, குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவு கொட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரத்தை அடுத்துள்ள உப்புத்துறைபாளையம், சூளைமேடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை, நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து இந்த பகுதியில் கொட்டி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.



இதனால், துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நேற்று மதியம் 3:00 மணியளவில், தாராபுரம் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமதானம் செய்தனர்.

மேலும் அங்கு வந்த தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், மாலைக்குள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த மறியல் போராட்டத்தில், வி.சி.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தமிழ் வேந்தன், மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், நகர பொருளாளர் கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...