கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரனை

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து தோட்டாக்கள் மற்றும் கரி மருந்துகளும் பறிமுதல்.



கோவை: நாட்டு துப்பாக்கி, பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவற்றை நபர் ஒருவர் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப்பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும், பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவை வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்தது உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என தெரிய வந்தது.

இதனைடுத்து ஞானசேகரனை தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கிகளை கைப்பற்றி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...