பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும்: கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை

கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. இதில், நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஆர்.எஸ்.கணேசன் தலைமை தாங்கிய கூட்டத்தில் ராதாகிருஷ்ணன், பாரூக், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரஹிமான் வரவேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல பொருட்களுக்கு உரிமம் வழங்குவதில் இரட்டை முறையை மாற்றி அமைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும், தியாகி குமரன் மார்க்கெட் நுழைவு வாயில் வளைவு பெயர் பலகை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...