சின்னதடாகம் அருகே செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடிய நபர் கைது!

சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய அஜீஸ் என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்த நிலையில், அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



கோவை: சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னத்தடாகம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூகள் உள்ளன. சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற பிரப்பித்த உத்திரவு காரணமாக கடந்த 4 வருடங்களாக செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளன.

இந்த நிலையில் சின்னத்தடாகம் அருகில் உள்ள வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள MVN சேம்பர் என்ற செங்கல் சூளையில், நேற்று இரவு புகுந்த மர்ம நபர், அங்கு செயல்படாமல் இருந்த இயந்திரத்தில் இருந்து பழைய இரும்புகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தடாகம் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பதும் இவர் அங்கிருந்த செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...