இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் - 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாமில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். குறைபாடு இருந்த ஒருசில மாணவர்களை பெற்றோர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் வருமாறு மருத்துவர்கள் கூறினர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பல் பரிசோதனை முகாம் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்த முகாமை தமிழம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் இரா. பழனிச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் இரா.ப.அரவிந்தன் முன்னிலை வகித்தார்.



இந்த பரிசோதனைகளை தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த வாசன் ஐ கேர் சார்பில் மார்கெட்டிங் மேனேஜர் பத்மநாதன் தலைமையில் மருத்துவர்கள் பாலா, முகமது மற்றும் ரூபிகா ஆகியோரும், காரமடை வினிஸ் பல் மருத்துவமனையில் இருந்து டாக்டர்.மெல்சிஜிடெக் மற்றும் டாக்டர்.வசுந்தரா ஆகியோரும் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் பல் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொண்டு குறைபாடுகளை மாணவர்களிடம் கண்டறிந்தும், அதற்கான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

ஒரு சில மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலை இருப்பதால் அவர்களை அவர்களது பெற்றோருடன் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்த முகாமில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பெ.பாஸ்கர் தலைமையில் துணை முதல்வர் ஷிபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...