பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி - இடிந்து விழும் முன்பே சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

உடுமலையில் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது.



குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளதா மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ராமசாமி நகரில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதனால் தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. அத்துடன் குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளது.



அதுமட்டுமின்றி தொட்டி நிறைந்து வெளியேறும் தண்ணீர் வழிந்து செல்வதில்லை. மாறாக தொட்டியின் கீழ் புறத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் தொட்டி படிப்படியாக வலுவிழந்து நாளடைவில் முற்றிலுமாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...