நீலகிரியில் நியாயவிலைக் கடை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக-வினர் கைது


நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரேசன் கடை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் உட்பட 6 தாலுகாவில் உள்ள 404 நியாயவிலைக் கடையில் இதுவரை 89 நியாயவிலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது விநியோக பொருட்கள் அதிமுக-வினரால் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும், வழங்கப்பட வேண்டிய பொருட்களை எவ்வித பாரபட்சமுமின்றி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து அனுமதியின்றி உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 1441 திமுக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...