லாரி மோதி காட்டு மாடு சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம் - ஓட்டுநரை பிடித்து காவல்துறை விசாரணை

கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: லாரி மோதி உயிரிழந்த காட்டுமாடு பிரேத பரிசோனை செய்யப்பட்டது. இதில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் காட்டு மாடுகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. இவைகள் ஆனைகட்டி கோவை சாலையில் அவ்வப்பொது கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே காட்டு மாடுகள் இரண்டு சாலையை கடந்துள்ளன. அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டு மாடு காயமடைந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இன்று காலை சுமார் கோவை வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோனையில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...