சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கம் - கோவையில் இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாட்டம்!

நிலவில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை புரிந்த நிலையில் மனசு நிறைந்தது போலவே வயிறு நிறைய வேண்டும் என கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள பிரியாணி கடை ஒன்றில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி, சில்லி சிக்கன் இலவசமாக வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.



கோவை: நிலவில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் கோவையில் பிரியாணி கடை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

உலகமே உற்று நோக்கி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த மகத்தான பெரும் சாதனைகளை விழி மூடாமல் வியந்து பார்த்தனர். சந்திரனில் தென் துருவத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் - 3 நிலை நிறுத்தப்பட்டவுடன், நாடே கொண்டாடி தீர்த்தது.

கோவையில் கல்லூரிகள், பொது இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.



அந்த வகையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் இயங்கும்பிரியாணி கடையில், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி சந்திரயான் வெற்றி கொண்டாடப்பட்டது.



இந்த கடையின் உரிமையாளரும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவருமான ஜெ. முகமது ரஃபி, 300க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கினார்.



இது குறித்து பிரியாணி கடை உரிமையாளர் முகமது ரஃபி கூறியதாவது, இந்தியா நாடு இன்று உலக அரங்கில் மகத்தான சாதனை புரிந்திருக்கின்றது. இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 விண்கலத்தை தரை இறக்கியிருக்கிறது.

உலகிலேயே முதல் நாடாக இந்தியா பெருமைக்குறிய இந்த சாதனை செய்தது. இந்தியர்களாக இருக்கின்ற அனைவருக்கும் இது உலக அரங்கில் பெருமைப்பட வைத்திருக்கின்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த இந்த சாதனையை இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரயான்வெற்றி இந்தியர்களின் மன நிறைவினை தந்த நிலையில், வயிறும் நிறைய வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் நடத்துகின்ற பிரியாணி கடையில், வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாடினோம்.

இந்தியாவின் இஸ்ரோ செய்த இந்த உலகம் போற்றும் மகத்தான சாதனையில், தமிழக விஞ்ஞானிகள் பெரும் பொறுப்பில் இருந்தது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நம் நாட்டின் உலக அளவிலான மரியாதை மென்மேலும் ஓங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...