இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எங்க ஊரான விழுப்புரத்தை சேர்ந்தவர் - அமைச்சர் பொன்முடி பெருமிதம்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.




கோவை: உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி. இது திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



கோவை காளப்பட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.



இதில் அமைச்சர்கள் பொன்முடியும், முத்துசாமியும் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்றார்.

உலக அளவில் சந்திர மண்டலத்திற்கு செல்வதில் இயக்குனராக உருவாகி இருப்பது பெருமை. அவருடைய தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய திருச்சி மண்டல பொறுப்பாளராக இருந்தவர். திமுகவை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...